போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வருவது தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர் ராம் ஷிண்டே கூறியதாவது, சஞ்சய் தத் அடைக்கப்பட்டுள்ள சிறையில், 4ககும் மேற்பட்டோர் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை ஒருமுறை கூட பரோலில் விடுவிக்கப்படவில்லை. ஆனால், சஞ்சய் தத்தோ, பலமுறை பரோலில் சென்று வருகிறார். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சஞ்சய் தத்திற்காக, சட்டம் வளைக்கப்பட்டுள்ளதாக தான் கருதுகிறேன். இதனால், சஞ்சய் தத்திற்கு வழங்கப்படும் பரோல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக ஷிண்டே கூறினார். பிகே படத்தை பார்ப்பதற்காக, 14 நாட்கள் கால அளவிலான பரோலில், சஞ்சய் தத் தற்போது வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.