‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இரவு முழுக்க குடித்துவிட்டு காலையில் குளிக்காமல் கூட சில ஹீரோக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகிறார்கள், அவர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது குமட்டல் வருகிறது என்று கூறியுள்ளார் நடிகை கத்ரீனா கைப். பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனாவிடம் பாலிவுட் ஹீரோக்களை பற்றி கேட்க, தனது மனகுமுறல்களை எல்லாம் கொட்டி தீர்த்து பாலிவுட் ஹீரோக்களை நாறடித்துவிட்டார்.
அப்படி என்ன சொன்னார்....?
கத்ரீனா கூறியதாவது, பாலிவுட்டில் ஹீரோக்கள் ரொம்ப மோசமானவர்கள், சுத்தமற்றவர்கள். இரவெல்லாம் குடித்துவிட்டு காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு குளிக்காமல் கூட கிளம்பி வந்துவிடுகிறார்கள். அவர்கள் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது ரொம்ப சிரமப்படுகிறேன். சில சமயங்களில் அந்த நாற்றத்தால் வாந்தி கூட வந்துவிடுகிறது. நான் எந்தளவுக்கு கஷ்டப்படுகிறேன் என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
அதேசமயம் தென்னிந்திய ஹீரோக்கள் சூப்பரானவர்கள். ஹீரோயின்களை மதிக்க தெரிந்தவர்கள். பாலிவுட் ஹீரோக்கள், தென்னிந்திய ஹீரோக்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.