‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பல்வேறு சர்வதேச படவிழாக்களில் விருதுகளை குவித்து வரும் மராட்டிய படம் கபுஸ் கொண்டியாச்சி கோஸ்தா. முடிவில்லா கதை என்று பொருள். நாக்பூர் பகுதியில் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம். அப்படி தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாய தம்பதிகளின் 3 மகள்கள் வாழ்க்கையில் எப்படி போராடி ஜெயிக்கிறார்கள் என்பது கதை. மகரந்த அனுஷ்பூர், சமிதாகுரு, பரத் கஷ்பூர், கவுரி கோங்கே நடித்துள்ளனர்.
9வது ஆசிய திரைப்பட விழா உள்பட பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றுள்ளது. இதனை மிருனாளினி போஷல் என்ற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் அடிதட்டு மக்களின் குறிப்பாக விவசாய மக்களின் பிரச்னைகளை மையமாக கொண்ட 50 ஆவணப் படங்களை இயக்கி உள்ளார். அவர் இயக்கிய முதல் திரைப்படம் இது.
தற்போது இந்தப் படம் 87வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் அடுத்து சுற்றுக்கு வந்திருக்கிறது. அதாவது இப்போது பட்டியலிடப்பட்டுள்ள 323 படங்களுக்குள் வந்திருக்கிறது. இறுதி சுற்று வரை செல்லும் வாய்ப்பிருப்பதாக சினிமா பார்வையாளர்கள் கருதுகிறார்கள். "விருதுகளை மனதில் வைத்து இந்தப் படத்தை இயக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து இயக்கியது" என்கிறார் மிருனாளினி.