‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தி நடிகை ஜாக்குலின் நம்ம ஊர் அமலா, த்ரிஷா மாதிரி பிராணிகள் நலனின் அக்கறை காட்டுகிறவர். அதற்கான பல பணிகளை செய்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் உள்ள பிராணிகள் நல உரிமை அமைப்பு (பீட்டா) ஜாக்குலினின் பிராணிகள் நலச் சேவைகளை பாராட்டி 2014ம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுத்து விருது வழங்கி உள்ளது.
"பிராணிகள் மீது ஜாக்குலின் கனிவும், பரிவும் காட்டுவதில் உதாரணமாக திகழ்கிறார்" என்று பீட்டா அமைப்பின் இங்கிலாந்து நாட்டு இயக்குனர் மிமி பிகேச்சி தெரிவித்துள்ளார். ஜாக்குலினை போன்றே நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கும் சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த நீதிபதிகளில் ஒருவர்.