‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
லண்டனில் 2014ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி (நேற்று) நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரொலென் ஸ்ட்ராஸ் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 121 அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட கோயல் முதல் பத்து இடங்களுக்குள் வந்தார்.
இந்த விழாவின் சிறப்பு நிகழ்வாக இதே போட்டியில் 1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஸ்வர்யாராய் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். 20 வருடங்களாக உலக அழகியாகவே வலம் வரும் ஐஸ்வர்யராய் சிறந்த நடிகை, சிறந்த சமூக சேவை, சிறந்த குடும்ப தலைவி என்கிற பல பரிமாணங்களில் முன்னணியல் நிற்பதால் அவரை கவுரப்படுத்த உலக அழகிப்போட்டி அமைப்பு முடிவு செய்து அவரை அழைத்தது.
அவரை மேடைக்கு அழைத்தபோது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் குழந்தையுடன் மேடைக்கு வந்தார். அப்போது அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. "உலக அழகி பட்டம் பெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகும் என்னை நினைவில் வைத்து அழைத்து கவுரவித்ததற்கு நன்றி" என்றார் ஐஸ்வர்யா. 20 வருடங்களுக்கு முன்பு அந்த மேடையில் எப்படி நின்றாரோ அப்படியே இப்போதும் இருந்ததுதான் விழாவின் ஹைலைட். அதோடு இப்படி ஒரு சிறப்பு அழைப்பாளரை அழைத்து கவுரவிப்பதும் உலக அழகி போட்டியில் இதுவே முதன்முறை.