போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் சாதகமான முன்னேற்றத்தை உருவாக்கும் முயற்சியில் worldoo.com ஈடுபட்டுள்ளது. இந்த இணையதளத்துடன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து பணியாற்ற உள்ளார். worldoo.com இணையதளம், குழந்தைகளின் சுற்றுச்சூழல் தொடர்பான முதல் ஆன்லைன் இணையதளம் ஆகும். குழந்தைகளின் இணையதள பயன்பாடு குறித்த முன்னேற்றத்திற்காக, குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் பெருமளவில் இதில் பங்கேற்க வேண்டும் என்று worldoo.com இணையதளம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த விழிப்புணர்வு இயக்கத்திற்கு "வாருங்கள் உருவாக்குவோம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை, நடிகர் அமிதாப் பச்சன் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், அமிதாப் பச்சன் பேசியதாவது, இன்டர்நெட், தற்போது கம்யூனிகேசன் துறையில் இன்றியமையாத கருவியாக உள்ளது. தற்போதுள்ள குழந்தைகளின் கைகளிலேயே, உலகம், இணையதளம் வடிவில் சுருங்கியுள்ளது. டெடி பியர் பொம்மைகள் தவழ்ந்து வந்த குழந்தைகளின் கைகளில் தற்போது டேப்லெட் கம்ப்யூட்டர்கள் உள்ளன. குழந்தைகளின் கைகளில் இணையதளம் கிடைத்திருப்பது என்பது வரவேற்கத்தக்க நிகழ்வுதான் என்றாலும், இணையதளத்தில் குவிந்து கிடந்துள்ள அபாயங்களிலிருந்து, அவர்களை பாதுகாப்பது என்பது அதனினும் முக்கியமானதாகிறது. இன்டர்நெட், குழந்தைகளை, ஒரு தலைமுறையிலிருந்து, அடுத்த தலைமுறைக்கு வெகுவேகமாக முனனேற்றி செல்கிறது. அவ்வாறு செலபவர்கள், அதன் சாதக, பாதகங்களை அறிந்து கொள்வதனாலேயே, அவர்களை நன்மனிதர்களாக மாற்ற இயலும் என்பது மறுப்பதற்கில்லை. குழந்தைகளின் நலனுக்காக, worldoo.com இணையதளம், இந்த அருமபெரும் செயலை, முன்னெடுத்தி செல்வது மகிழ்ச்சிக்குரியது என்று அமிதாப் பச்சன் கூறினார்.