ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தற்போது திவர் படத்தின் ப்ரீபுரோடெக்ஷன் பணிகளில் மும்முரமாக இருந்து வரும் அர்ஜூன் கபூர் தனியார் வங்கி ஒன்றில் ரூ.40 லட்சம் கடன் வாங்கி உள்ளாராம். அர்ஜூன் கபூரும், அவரது தாய்வழிப் பாட்டியான ஷட்டி சேரியும் இணைந்து இந்த கடனை வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளார்களாம். இதற்காக அவர்கள் இருவரும் வங்கிக்கு நேரில் சென்று கடனுக்கான விண்ணப்பத்தையும் மற்ற பேப்பர்களையும் ஒப்படைத்ததாகவும், கடன் தொகை விரைவில் அப்ரூவல் ஆகும் எனவும் கூறப்படுகிறது.
அர்ஜூன் கபூர் விரைவில் தொழில் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், இதற்காக தனது சொத்துக்களை வைத்து இதில் முதலீடு செய்வதற்காக வங்கியில் கடன் பெற விண்ணப்பித்துள்ளாராம். இருப்பினும் கடன் வாங்குவதற்கான காரணத்தை வெளியிட அர்ஜூன் மறுத்து விட்டாராம். இது குறித்து அர்ஜூனின் உதவியாளர் கூறுகையில், இந்தியாவில் எல்லோரும் தான் வங்கியில் கடன் வாங்குகிறார்கள். அதில் அர்ஜூனின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் விதிவிலக்கல்ல என தெரிவித்துள்ளார்.