போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
2010க்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யாராய், 4 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது சஞ்சய்குப்தா இயக்கும் ஜாஸ்பா என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். சபானா ஆஸ்மி, இர்பான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும இந்த படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறாராம் ஐஸ்வர்யாராய்.
மேலும், ஐந்து முறை தேசிய விருது வாங்கியிருக்கும் சபானா ஆஸ்மியுடன் எதிரும் புதிருமான வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராய், இனிமேல் தானும் நல்லதொரு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாக நிலைக்க வேண்டும் என்பதற்காக, அவருடன் போட்டி போட்டு நடிக்க வேண்டும் என்று தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.
அதனால் இதுவரை ஐஸ்வர்யாராய் நடித்த படங்களைப் போல் இல்லாமல் இந்த படத்தில் அவரிடமிருந்து மெச்சூரிட்டியான நடிப்பை எதிர்பார்க்கிறாராம் இயக்குனர் சஞ்சய்குப்தா. அதோடு, டிசம்பர் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் ஜாஸ்பா படத்தின் படப்பிடிப்பை வேகமாக நடத்த திட்டமிட்டுள்ள இயக்குனர், அடுத்த ஆண்டு நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இப்படத்தை திரையிட திட்டமிட்டிருக்கிறாராம்.
ஆக, கடந்த சில ஆண்டுகளாக கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்று மற்றவர்கள் நடித்த படங்களை பார்த்து ரசித்து வந்த ஐஸ்வர்யாராய், அடுத்த ஆண்டு தான் நடித்த படமே திரையிடப்பட இருப்பதால் இப்போதே அந்த படத்தில் நடிக்க உற்சாகமாக இருக்கிறாராம்.