‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபு தேவா இயக்கிய ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து விட்டதால், படத்தின் புரோமோஷன் வேலைகள் துவங்குவதற்கு முன் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள அஜய் தேவ்கன் முடிவு செய்திருக்கிறாராம். விடுமுறையை கழிப்பதற்காக தனது மனைவி கஜோல் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு துபாய் போயிருக்கிறாராம் அஜய்.
அஜய்யுடன் அவரது பெற்றோரும் துபாய் சென்றுள்ளனராம். தீபாளிக்கு முன் அஜய் ஊர் திரும்புவார் என கூறப்படுகிறது. அக்டோபர் 21ம் தேதி மும்பை திரும்ப திட்டமிட்டுள்ள அஜய், அடுத்த நாள் (தீபாவளியன்று) ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் ஃபஸ்ட்லுக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம்.
அதற்கு பிறகு, ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் புரோமோஷன் வேலைகள், தான் இயக்க உள்ள ஷிவாய் படத்தின் ப்ரீ புரோடெக்ஷன் வேலைகளின் பிஸியாகி விடுவாராம். அவரது மனைவி கஜோலும் அவர் தயாரிக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாகி விடுவாராம்.