போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டின் பல படங்களில் ஒன்றாக நடித்து சாதனை படைத்த ரன்பீர் கபூர்-தீபிகா படுகோனே ஜோடி தற்போது மீண்டும் இணைய உள்ளது. ராம் லகான் படத்தின் ரீமேக்கின் இந்த ஜோடி மீண்டும் இணைய ஒப்பந்தமாகி இருப்பது தான் பாலிவுட்டின் தற்போதைய செய்தி.
அனில் கபூர்-ஜாக்கி ஷரோப் நடித்த ராம் லகான் படத்தை தற்போது ரோஹித் ஷெட்டி ரீமேக் செய்ய உள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் நடித்த கதாபாத்திரத்தில் ரன்பீரை நடிக்க வைக்க ரோஹித் ஷெட்டி ஏற்கவே முடிவு செய்து விட்டராம். அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பல நடிகைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. முடிவாக மாதுரி தீட்சித் நடித்த வேடத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனே ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
யேஹ் ஜவானி ஹேய் தீவானி படத்தில் ரன்பீர்-தீபிகா ஜோடியின் கெமிஸ்ட்ரி எதிர்பார்த்ததை விட பெருத்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி தீபிகா, ரோஹித் ஷெட்டியின் ஆஸ்தான ஹீரோயின் என்பதால் அவரையே இந்த படத்திலும் நடிக்க வைக்க ரோஹித் ஷெட்டி முடிவு செய்துள்ளாராம்.