‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
2015ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து, லையர்ஸ் டைஸ் என்ற படம் தேர்வாகியுள்ளது. சினிமா துறையில் உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். 2015ம் ஆண்டு விருதுக்கான பணிகள் இப்போதே துவங்கிவிட்டன. முதற்கட்டமாக ஒவ்வொரு நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 2015-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் பங்கேற்க, இந்தியாவிலிருந்த அனுப்பக் கூடிய திரைப்படங்களை தேர்வு செய்யும் போட்டியில் 30 படங்கள் பங்கேற்றன. அந்த திரைப்படங்களில் லையர்ஸ் டைஸ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கீதாஞ்சலி தபா, நவாஸுதீன் சித்திக் ஆகியோர் நடித்த இந்தப்படத்தை என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நள தமயந்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்த கீது மோகன் தாஸ் இயக்கி இருந்தார். இந்திய-திபெத்திய எல்லையில் வாழும் பழங்குடி பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தியது இந்தப்படம். டில்லிக்கு வேலை தேடி சென்ற தனது கணவர் பல மாதங்களாக வீடு திரும்பாததை அடுத்து, அவரைத் தேடி தனது மகளுடன் செல்லும் பெண்ணின் பயணக் கதை இது. இந்தப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.