போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டின் மிக திறமை வாய்ந்த நடிகராக வலம் வந்த அக்ஷை கண்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவ் பெனிகல் இயக்கும் பாம்பே சாமுராய் படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் அக்ஷையுடன் கரீனா கபூரும் ஃபரான் அக்தரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் அக்ஷை நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த படத்தின் கதையில் நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரிடம் அக்ஷை கூறி உள்ளாராம். கதையில் அக்ஷையின் தலையீடு அதிகம் உள்ளதால் பட நிறுவனம் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாம். நீண்ட நாட்களுக்கு பின் நடிக்க வந்திருக்கும் அக்ஷையிடம் இந்த ஒரு படம் தான் கைவசம் உள்ளதாம். இருந்தாலும் கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பட அதிபர்களிடம் அக்ஷை பேசி வருகிறாராம். இதனால் இப்படத்தை அவரை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக இர்பானை புக் செய்ய பட நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம்.