ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கிக் ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரன்பீர் கபூருடன் ராய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மலேசியாவின் லாங்கவாய் தீவில் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கிருந்த குரங்கு கூட்டம் ஒன்று அவரை தாக்கி உள்ளது. ஒரு முறை மட்டுமல்ல, பலமுறை அவர் குரங்கு கூட்டத்தால் தாக்கப்பட்டாராம்.
ஜாக்குலின் வைத்திருந்த உணவுப் பொருட்களையும், மற்ற சில பொருட்களையும் அவைகள் தூக்கிச் சென்றுள்ளன. இருந்தாலும், சூட்டிங் நடக்கும் இடத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்த குரங்குகள் ஜாக்குலின் நடிப்பதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து நின்றனவாம். அதே சமயம் அவருடன் நடித்த ரன்பீர் கபூரை அந்த குரங்கு கூட்டம் கண்டுகொள்ளவே இல்லையாம்.
ஜாக்குலின் குரங்குகளால் தாக்கப்பட்ட தகவல் தயாரிப்பாளர் காதுகளுக்கு சென்றதாம். இருந்தாலும் அவர் அதை நம்ப மறுத்து விட்டாராம். மாறாக நீங்கள் அந்த குரங்குளை ஏதாவது சீண்டி இருப்பீர்கள் அதனால் தான் அவைகள் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் என ஜாக்குலினையே குறை கூறினாராம்.
ஜாக்குலின்-ரன்பீர் ஜோடி ஆச்சர்யமூட்டும் பல புதிய அவதாரங்களில் தோன்றும் ராய் படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறதாம்.