போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தனது படங்களுக்காக கடின உழைப்பை அளித்து வரும் ஷாருக்கான் பெரிய அளவில் புகழ்பெற்றிருந்தாலும் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவிலேயே நடித்து வருகிறார். இது பற்றி சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், நான் ஒரு சமயத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. கடந்த 25 ஆண்டுகளில் நான் 55 படங்களில் நடித்துள்ளேன். அதிக பட்சம் வருடத்திற்கு 2 படங்கள் என்ற அளவிலேயே நடித்து வந்துள்ளேன். அதனாலேயே மக்கள் என் படங்களை அதிகம் ரசித்து பார்க்கின்றனர்.
தொடர்ந்து இதனையே கடைபிடிக்க நினைக்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே நடிப்பதால் அதிக கவனம் செலுத்த முடிகிறது. எனது முழு பங்களிப்பையும் அளிக்க முடிகிறது. ஒரு படம் முடித்த பிறகு சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு, என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகிறேன். பின்னர் அடுத்த படத்தின் பணிகளில் இறங்குகிறேன். ஒரு படம் முடித்த உடனேயே அடுத்த படத்தின் வேலைகளில் இறங்குவது என்னை ரொம்பவே எரிச்சல் அடைய செய்து விடுகிறது. அதனை அப்படி நான் செய்வதில்லை.
கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் இருந்து தற்போது வரை இதனையே தொடர்ந்து செய்து வருகிறேன். அதனால் எனது பணியை உற்சாகத்துடன் செய்கிறேன். இவ்வாறு தன் படங்களுக்கு தான் அளிக்கும் முக்கியத்துவத்தை பற்றியும், நேர்த்தியாக படங்களை கையாள்வது பற்றியும் ஷாருக்கான் விளக்கினார்.