‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டில் சமீப காலமாக அனைவராலும் விரும்பப்பட்டு வரும் ஹீரோவாக வலம் வருகிறார் சித்தார்த் மல்கோத்ரா. வெறும் 3 படங்கள் மட்டுமே நடித்திருந்த போதிலும் சித்தார்த், பல முன்னணி நடிகர்களான அமீர் கான், ஹிருத்திக் ரோஷன், ஃபரன் அக்தர், ரன்பீர் கபூர் போன்றோருக்கு அடுத்த இடத்திற்கு வந்துள்ளார்.
சித்தார் மல்கோத்ரா, நித்ய மெஹ்ரா என்ற படத்தில் அடுத்து நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் அமீர் கான், ஹிருத்திக் ரோஷன், ஃபரன் அக்தர், ரன்பீர் கபூர் போன்ற முன்னணி ஹீரோக்களின் பெயர்களே பரிசீலனை செய்யப்பட்டு வந்ததாம். ஆனால் தற்போது அவர்கள் யாரும் இல்லாமல், அப்படத்தில் நடிப்பதற்கு சித்தார்த் மல்கோத்ரா புக் செய்யப்பட்டுள்ளாராம். இத்தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் ரித்திஷ் சித்வானி உறுதி செய்துள்ளார்.
இப்படத்திற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. கரன் ஜோகர் கோ புரோட்யூசராக பணியாற்ற உள்ள இப்படத்தில் சித்தார்த் மல்கோத்ராவிற்கு ஜோடியாக நடிக்க போகும் ஹீரோயின் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் அந்த கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.