ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஐ படத்தை வழக்கம்போல் பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து ஏற்கனவே தான் ரஜினியை வைத்து 200 கோடி பட்ஜெட்டில் இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், அந்த படத்திலும் ரஜினியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை சந்தித்து பேசினார்.
ஆனால், தனது உடல்நிலை அதற்கு ஒத்து வராது என்று சொல்லி, தவிர்த்து விட்டார் ரஜினி. அதனால், அடுத்து யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிர ஆலோசனை நடத்தி வந்த ஷங்கர், இப்போது இந்தி நடிகர் அமீர்கானை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். இந்திய அளவில் பெரிய நடிகரான அவர் நடித்தால் எந்திரனை விட எந்திரன்-2 இன்னும் பெரிய படமாகி விடும் என்று நினைப்பவர், அப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இயக்குகிறாராம்.
இதுகுறித்து, அமீர்கானை ஷங்கர் சந்தித்து பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனபோதும், ஐ படத்தின் ரிலீசுக்குப்பிறகுதான் அப்படம் பற்றிய தகவல்களை வெளியிடுவாராம். மேலும், 200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் தயாரான நிலையில், இரண்டாம் பாகத்தை 250 கோடியில் இயக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர். அப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.