ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் |
ராஞ்சனா ஹிட்டுக்கு பிறகு தனுஷ் பாலிவுட்டில் நெக்ஸ்ட் டோர் ஹீரோவாகி இருக்கிறார். தற்போது அவர் ஆர்.பால்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின் அக்ஷரா ஹாசன். தனுஷ் காது கேளாத வாய்பேச முடியாத இளைஞனாக நடிக்கிறார். அவருக்கு நம்பிக்கையூட்டி பெரிய ஆளாக்கும் பெரிய மனுஷன் கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.
தமிழ் படங்களில் ஏகப்பட்ட இயக்குனர்கள் இணைந்து நடிப்பது போல் இந்தியில் ஒரு டிரண்டை உருவாக்குகிறார் பால்கி. இந்தப் படத்தில் இந்தியில் முக்கிய இயக்குனர்களான ராஜ்குமார் ஹிரானி, ராகேஷ் ஓம்பிரகாஷ், காஷ் மெஹ்ரா, கரண் ஜோஹர், அனுராக் பாஷூ, கவுரி ஷிண்டே ஆகிய 6 இயக்குனர்கள் நடிக்கிறார்கள். அதாவது அவர்கள் அவர்களாகவே வருகிறார்கள். கதைப்படி தனுஷ், படிப்படியாக வளர்ந்து சினிமா நடிகராவார். அவரை இயக்கும் இயக்குனர்களாக இவர்கள் நடிக்கிறார்கள். இந்தியில் 6 இயக்குனர்கள் ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை.