தியேட்டரில் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் : சமாதானப்படுத்திய நடிகை | திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை : ஸ்வேதா மேனன் | 11 மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் | அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.59.50 கோடி | நடிகை பாலியல் கடத்தல் வழக்கு : ஆறு பேருக்கு 20 வருட சிறை | ஜெயிலர் 2 புது அப்டேட் வராது ஏன்? | 'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை | பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் |

1995ம் ஆண்டில் ஹிந்தியில் ஷாருக்கான், கஜோல் நடிப்பில் வெளியான படம் ‛தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே'. ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்த படம் நான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு 102 கோடி வசூலித்தது. இப்படம் திரைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி லண்டனில் உள்ள லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், காஜோலுக்கு வெண்கல சிலை வைத்துள்ளார்கள். இது இங்கு வைக்கப்பட்டுள்ள முதல் இந்திய பட வெண்கல சிலையாகும்.
இந்த சிலையின் திறப்பு விழாவில் ஷாருக்கான், கஜோல் ஆகிய இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதுகுறித்த புகைப்படத்தை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷாருக்கான் ஒரு பதிவும் போட்டுள்ளார்.
அதில், ‛‛தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தின் 30வது நிறைவு ஆண்டை கொண்டாடும் வகையில் இன்று லண்டனில் லெஸ்டர் சதுக்கத்தில் ராஜ் - சிம்ரனின் வெங்கல சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லெஸ்டர் சதுக்கத்தில் காட்சிகள் பாதைகள் சிலையுடன் கவுரவிக்கப்படும் முதல் இந்திய திரைப்படம் இது என்பதில் நம்ப முடியாத அளவிற்கு மகிழ்ச்சி. இதை சாத்தியமாக்கிய இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் மிக்க நன்றி. நீங்கள் லண்டனில் இருக்கும்போது ராஜ் அண்ட் சிம்ரனை சந்திக்க வாருங்கள். தில்வாலே துல்ஹனியா உடன் நீங்கள் இன்னும் பல நினைவுகளை உருவாக்குவதை நாங்கள் காண விரும்புகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.