போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜீத். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு சினிமா உலகில் நிறையபேருக்கு உதவிகள் செய்கிறார். இதனால் அவரை தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு பிடிக்கிறது ஆனால், இப்போது மாநிலம் கடந்து அஜீத்தை பெருமையாக பேசத் தொடங்கிவிட்டார்கள்.
அப்படித்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவிக்காக சிறிய ரோலில் நடித்த அஜீத், அதற்காக சம்பளமே வாங்கிக்கொள்ளவில்லை. அதனால், அந்த நன்றிக்கடனை இன்றுவரை மறக்காத ஸ்ரீதேவி, அஜீத்தை பெருமையாக சொல்வதோடு, அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும் கூறி வருகிறார்.
இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷாரூக்கான் இந்தியில் நடித்த அசோகா என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அஜீத் நடித்திருந்தார். ஆனால் அதற்காகவும் அவர் சம்பளமே வாங்கிக்கெள்ளவில்லையாம். அதை சமீபத்தில் நினைவுகூர்ந்துள்ளார் ஷாரூக்கான். அப்போதைக்கு அஜீத்தை நான் சிறிய நடிகர் என்றுதான் நினைத்தேன். ஆனால் சமீபகாலமாக தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபிறகுதான் அவர் பெரிய ஹீரோ என்பதை தெரிந்து கொண்டேன். ஆனபோதும், எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக அவர் என்னுடன் பழகி என் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் என்று அஜீத் பற்றி சொல்கிறார் ஷாரூக்.