ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன் இப்போதும் படங்களில் நடித்து வருகிறார். அதனால் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லை. மாறாக, நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருக்கிறார்களாம். அவர் மும்பையிலுள்ள எந்த ஏரியாவுக்கு சென்றாலும் ரசிகர்கள் அவரை மொய்த்துக்கொள்கிறார்களாம். அதனால் தனது ரசிகர்களின் அன்புக்காக அவர்களை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்து வருகிறார் அமிதாப்.
ஆனால், அப்படி சந்திப்பவர் அவர்களுடன் நெருங்கி வந்து உரையாடுவதெல்லாம் கிடையாதாம். தனது வீட்டு பால்கனியில் நின்றபடி ரசிகர்களைப்பார்த்து கையசைப்பாராம். அதைப்பார்த்து அவர்கள் உற்சாக முழக்கமிடுவதோடு, போட்டோக்களையும் சரமாரியாக எடுப்பார்களாம். சில நிமிடங்கள் அப்படி நின்று கையசைக்கும் அமிதாப்பச்சன் பின்னர் விடைபெற்று வீட்டுக்குள் சென்று விடுவாராம். இது ரொம்ப வருடங்களாக நடந்து வருகிறதாம்.
இந்தநிலையில், சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தனது மகன் அபிசேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆரத்யா ஆகியோருடன் காட்சி கொடுத்து கூடியிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டாராம். குடும்பத்தினரோடு பால்கனியில் நின்றபடி அவர்கள் போஸ் கொடுக்க ரசிகர்களும், மீடியாக்களும் அதை போட்டோ, வீடியோ என எடுத்துக்கொண்டார்களாம்.