நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

பாலிவுட் நடிகர் சல்மான்கான் வருகிற மே மாதம் 4, 5ம் தேதிகளில் தி பிக் பாலிவுட் ஒன் என்ற நிகழ்ச்சியை இங்கிலாந்தில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் வருண் தவான், மாதிரி தீட்சித், டைகர் ஷெராப், கிர்த்தி சனோன், திஷா பதானி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க இருந்தார்கள். ஆனால் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்த நிகழ்ச்சியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருக்கிறார் சல்மான் கான்.
இது குறித்து இந்த நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீரில் துயரமான சம்பவம் நடைபெற்றிருக்கும்போது, இதுபோன்ற ஆடம்பர நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது தான் சரியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். என்றாலும் இது நாம் மகிழ்ச்சியை கொண்டாட உகந்த நேரம் இது அல்ல என்பதினால் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் சல்மான் கான்.