மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் அழகான வில்லன்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர். சமீபத்தில் கூட சுந்தர்.சி நடிப்பில் அவர் வில்லனாக நடித்திருந்த ‛மதகஜராஜா' திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகி உள்ளது. வில்லன் நடிகராக இருந்தாலும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்ட சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வசதி வாய்ப்பு இன்றி தவித்த ஏழை மக்கள் பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து மக்களின் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பிடித்தார் சோனு சூட். இந்த நிலையில் மோசடி வழக்கில் சோனு சூட்டை கைது செய்வதற்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சோனு சூட் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு மோசடி வழக்கு தொடர்பான வழக்கில் நான் ஒரு முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு அதற்கான சம்மன் தான் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் திங்கள் (பிப்-10) அன்று எனது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் என்னுடைய சார்பாக இந்த விவகாரத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்க இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தில் நான் நிறுவன தூதராகவோ அல்லது வேறு எந்த விதத்திலோ தொடர்பில் இல்லை.. தேவையில்லாமல் தற்போது மீடியாக்களின் கவனத்தை என் மீது திருப்ப முயற்சி நடக்கிறது.. பிரபலங்கள் எப்போதுமே இப்படி எளிதாக குறி வைக்கபடுவது வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் நான் நிச்சயம் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.