ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாவுக்காக வந்திருந்த 26 அப்பாவி பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து எதிரிகளுக்கு தக்க பதிலடி தர அரசு தயாராகி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த தாக்குதல் பற்றி கேட்கப்பட்ட போது தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இது வெறும் பஹல்காம் மீது மட்டும் தொகுக்கப்பட்டுள்ள தாக்குதல் அல்ல.. ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கை மீதும் கொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.. அந்த சம்பவத்தில் தங்கள் கண்முன்னே தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையையும், தங்களது கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் தீராத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இப்போது நாம் எடுத்துக் கொண்டுள்ள இந்த நேரம் கூட, இந்தியா இதற்கு எப்படி தக்க வகையில் பதில் கொடுக்கும் விதமாக எதிர்வினையாற்ற போகிறது என்பதற்காக தான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.