அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

முன்னணி மலையாள நடிகர் கே.ஆர்.ஜெயச்சந்திரன் மீது சமீபத்தில் மிக கொடுமையான பாலியல் புகார் அளிக்கப்பட்டது. தனது உறவுக்காரின் 4 வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த சிறுமியின் தந்தை கசாபா போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஜெயச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கோழிக்கோடு செசன்ஸ் கோர்ட்டில் ஜெயச்சந்திரன் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது, இதையடுத்து ஜெயச்சந்திரனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்கிடையில் அவர் தலைமறைவாகிவிட்ட தகவல் போலீசுக்கு கிடைத்தது.
ஜெயச்சந்திரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். அதனை விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கும்படியும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.