டிரைலரிலும் சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின்! | மூன்றாவது முறையாக இணைந்த நானி - அனிருத் கூட்டணி | நாளை அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'புஷ்பா 2' படப்பிடிப்பு நிறைவு | காதல் குறித்த கேள்வி- கடுப்பான சுனைனா! | சூர்யாவுக்கு ஜோடியாகும் காஷ்மிரா பர்தேசி? | 'லெவன்' படத்திற்காக டி.இமான் இசையில் ஆங்கில பாடல் பாடிய ஸ்ருதிஹாசன்! | ஸ்டார் சேனல்கள் கட்டணம் உயர்வா? டிஸ்னி ஸ்டார் மறுப்பு | அஜித்துடன் மோதத் தயாராகும் விக்ரம்! | ரஜினியும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்களா? சுஹாசினி சொன்ன பதில் |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரது 100 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. அதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இப்படியான நிலையில் தொடர்ந்து ஊடகங்களில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது அவதூறு செய்திகள் வெளியிட்டு வருவதால் தற்போது ஊடகங்கள் மீது 356வது பிரிவின் கீழ் மானநஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதில் எங்களது புகைப்படத்தை வெளியிட்டு ஊடகங்கள் தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி என்று நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கவில்லை. அதனால் எங்களை தவறான கோணத்தில் சித்தரித்து செய்தி வெளியிட்டு வரும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை நீதிமன்றத்தில் ஒரு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார்.