10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரது 100 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. அதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இப்படியான நிலையில் தொடர்ந்து ஊடகங்களில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது அவதூறு செய்திகள் வெளியிட்டு வருவதால் தற்போது ஊடகங்கள் மீது 356வது பிரிவின் கீழ் மானநஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதில் எங்களது புகைப்படத்தை வெளியிட்டு ஊடகங்கள் தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி என்று நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கவில்லை. அதனால் எங்களை தவறான கோணத்தில் சித்தரித்து செய்தி வெளியிட்டு வரும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை நீதிமன்றத்தில் ஒரு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார்.