சின்னத்திரை நடிகை இந்திய அழகியாக தேர்வு | 212 நாட்கள் நடைபெற்று முடிந்த ஜெயசூர்யாவின் கத்தனார் படப்பிடிப்பு | நடனம் ஆடுவதற்கு பயந்து காலை ஒடித்துக்கொள்ள நினைத்த ஜோதிர்மயி | அப்பாவின் படத்தையே மகனுக்கு சுட்டுக்கொடுத்த வெங்கட் பிரபு : அவரே வெளியிட்ட தகவல் | குருவாயூர் அம்பல நடையில் இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த பிரித்விராஜ் | புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஓய்வெடுக்க செல்லும் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | டிரைலரிலும் சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின்! | மூன்றாவது முறையாக இணைந்த நானி - அனிருத் கூட்டணி | நாளை அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'புஷ்பா 2' படப்பிடிப்பு நிறைவு |
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியை சேர்ந்தவர் நிகிதா போர்வால். அந்த மாநிலத்தின் முன்னணி தொலைக்காட்சி நடிகையாகவும், தொகுப்பாளராகவும் உள்ளார். 18வது வயதில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 60க்கும் மேற்பட்ட டி.வி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மிஸ்.இந்தியா போட்டியின் மூலம் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மிஸ் இந்தியா 2024ம் ஆண்டு அழகி போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில அளவில் வெற்றி பெற்ற 30 அழகிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 'மிஸ் இந்தியா 2024' பட்டத்தை நிகிதா போர்வால் பெற்றார். தாத்ரா நகர் ஹைவேலியை சேர்ந்த ரேகா பாண்டே 2-வது இடத்தையும், குஜராத்தை சேர்ந்த ஆயுஷி தோலாக்கியா 3-வது இடத்தையும் பிடித்தனர். கடந்த ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற நந்தினி குப்தா நிகிதாவுக்கு கிரீடம் சூட்டி கவுரவித்தார். முன்னாள் மிஸ் இந்தியா அழகியும், நடிகையுமான நேகா தூபியா, நிகிதா போர்வாலுக்கு சால்வை அணிவித்தார்.
மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்றது குறித்து நிகிதா கூறுகையில், “இந்த உணர்வு என்னால் விவரிக்க முடியாததாக இருக்கிறது. கிரீடத்தை அணிந்து கொள்வதற்கு முன்பு நான் உணர்ந்த நடுக்கங்கள் இன்னும் என்னை விட்டு அகலவில்லை.எனது பயணம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. சிறப்பான விஷயங்கள் இனிமேல்தான் வர இருக்கின்றன" என்றார்.
மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் நிகிதா போர்வால் 73-வது உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.