ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
ஹாலிவுட்டில் வெளியான அதிரடி ஆக்ஷன் தொடரான 'சிட்டாடல்' தொடரை தழுவி ஹிந்தியில் உருவாகி உள்ள தொடரில் வருண் தவான், சமந்தா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன. 'சிட்டாடல் : ஹனி பன்னி' என்ற டைட்டில் கொண்ட இந்த தொடர் வருகிற நவம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரை ராஜ் - டிகே இயக்கியுள்ளனர் . கேகே மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் மற்றும் காஷ்வி மஜ்முந்தர் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சமந்தா திரைப்பட நடிகையாகவும், அதிரடி உளவாளியாகவும் நடித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் சமந்தாவின் அதிரடி சண்டை காட்சிகள் வியக்க வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து சமந்தா கூறுகையில், "மனங்கவரும் கதைக்களம், செழுமையான கதாபாத்திர ஆழம் மற்றும் சர்வதேச தரத்திற்கு போட்டியாக விளங்கும் சண்டைக்காட்சிகளுடன் ஒரு ஆக்ஷன் நிரம்பிய பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக இது இருக்கும். இதில் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. இதிலுள்ள உளவு கதைகளின் தொகுப்பு, இந்த பிராஜெக்ட்டிற்குள் என்னை ஈர்த்தது. இந்தியாவில் மட்டுமல்லாது, பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும். பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்கள் இந்தத் தொடரை முழுமையாக ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்." என்றார்.