‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
தமிழில் ‛சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்தவர் அடா சர்மா. தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் இவர் ‛கேரளா ஸ்டோரி' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது ‛ரீட்டா சன்யால்' என்ற ஹிந்தி வெப்சீரிஸில் வக்கீலாக நடித்துள்ளார். ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த தொடர் பற்றி இவர் அளித்த பேட்டி...
இந்த தொடரில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள்...?
இந்த தொடரில் வக்கீல் துறையில் சாதிக்க போராடும் பெண்ணாக வக்கீல் வேடத்தில் நடித்துள்ளேன். ஒரு அரசியல் தொடர்பான வழக்கு என்னிடம் வருகிறது. இதில் வெற்றி பெற அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் இந்த தொடரின் கதை. பொதுவாக ஒரு நடிகைக்கு பலவிதமான வேடங்களில் நடிக்கும் ஆசை இருக்கும். இந்த தொடர் மூலம் எனக்கு ஹரியானா பெண், மீன் வியாபாரி, உணவு ஆய்வாளர் என பல விதமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரீட்டா சன்யாலுக்கும், உங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கா...?
ஆமாம். ரீட்டா சன்யால் போல் பலரும் சத்தியத்தின் வழியை பின்பற்றி வெற்றி பெற விரும்புகிறார்கள். நானும் நிஜ வாழ்க்கையில் அப்படித்தான். வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றக் கூடாது என்று நினைப்பேன். இதுவரை யாரையும் ஏமாற்றியதில்லை. இந்த தொடரில் ரீட்டா சன்யால் எந்த சூழலிலும் தோற்றது இல்லை, யாருக்கும் பயந்தது இல்லை. நானும் நிஜ வாழ்க்கையில் அப்படித்தான். யாருக்கும் பயப்பட மாட்டேன், எதிலும் தோற்க மாட்டேன்.
கேரளா ஸ்டோரிக்கு பின் படங்களின் கதை தேர்வில் மாற்றம் ஏதும் செய்துள்ளீர்களா...?
அப்படியெல்லாம் இல்லை. எப்போதும் போலத்தான் கதைகளை தேர்வு செய்கிறேன். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் முன்பு ஐந்து படங்கள் வாய்ப்பு வந்தது. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகின்றன. காதல், ஆக்ஷன், காமெடி என விதவிதமான ரோல்களில் நடிக்க அணுகுகிறார்கள். இதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.