என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளித்தனர். அதில் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் புகார் அளித்தார். அது மட்டுமல்ல கோழிக்கோட்டை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் ஆண் நடிகர் ஒருவரும் நடிகர் ரஞ்சித் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் வாய்ப்பு கேட்டு சென்ற தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை ஒரு பிரபல நடிகைக்கு அனுப்பியதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் பெற்றுள்ளார் இயக்குனர் ரஞ்சித். இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் அந்த ஆண் நடிகர் கூடிய குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ளனர்,
இது குறித்து அவர்கள் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நடிகர் 2012ல் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற இயக்குனர் ரஞ்சித்தின் படப்பிடிப்பிற்கு அவரை சந்திக்க வந்த போது ஒரு டிஷ்யூ பேப்பரில் தன்னுடைய மொபைல் நம்பரை எழுதிக் கொடுத்த ரஞ்சித் பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள தாஜ் ஹோட்டலுக்கு தன்னை வந்து சந்திக்குமாறு கூறியதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டல் துவங்கப்பட்டதே 2015 க்கு பிறகு தான் அப்படி இருக்கையில் எப்படி அந்த ஹோட்டலுக்கு தன்னை வரச்சொன்னதாக அந்த நபர் குறிப்பிட்டது உண்மையாக இருக்க முடியும் என்று கூறி இந்த வழக்கு வேண்டுமென்றே இயக்குனர் ரஞ்சித்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.