22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒரு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஹிந்தி நடிகை ஆலியா பட் வெளியிட்ட பதிவில், ‛‛மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை. பெண்கள் பாதுகாப்பாக இல்லை. 2022 முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி உள்ளது. மருத்துவ துறையிலேயே இப்படி நடப்பது பயமாக உள்ளது. ஒரு நாளைக்கு 90 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு சுமையாகி உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள், பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். தற்போதைய சூழலில் ஏதோ ஒரு பெரிய தவறு இருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூலகாரணத்தை கண்டறிந்து அதை சரி செய்யும் வரை இங்கு எதுவும் மாறாது'' என்கிறார்.