ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒரு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஹிந்தி நடிகை ஆலியா பட் வெளியிட்ட பதிவில், ‛‛மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை. பெண்கள் பாதுகாப்பாக இல்லை. 2022 முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி உள்ளது. மருத்துவ துறையிலேயே இப்படி நடப்பது பயமாக உள்ளது. ஒரு நாளைக்கு 90 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு சுமையாகி உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள், பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். தற்போதைய சூழலில் ஏதோ ஒரு பெரிய தவறு இருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூலகாரணத்தை கண்டறிந்து அதை சரி செய்யும் வரை இங்கு எதுவும் மாறாது'' என்கிறார்.