நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒரு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஹிந்தி நடிகை ஆலியா பட் வெளியிட்ட பதிவில், ‛‛மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை. பெண்கள் பாதுகாப்பாக இல்லை. 2022 முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி உள்ளது. மருத்துவ துறையிலேயே இப்படி நடப்பது பயமாக உள்ளது. ஒரு நாளைக்கு 90 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு சுமையாகி உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள், பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். தற்போதைய சூழலில் ஏதோ ஒரு பெரிய தவறு இருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூலகாரணத்தை கண்டறிந்து அதை சரி செய்யும் வரை இங்கு எதுவும் மாறாது'' என்கிறார்.