நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
புதிய படங்களின் வெளியீடுகளில் தேசிய அளவில் முக்கியமான ஒரு தினம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15. இந்த வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்கள் வந்தன.
ஹிந்தியில், அக்ஷய்குமார் நடித்த 'கேல் கேல் மெய்ன்', ஜான்ஆபிரகாம் நடித்த 'வேதா', ராஜ்குமார் ராவ் நடித்த 'ஸ்த்ரீ 2' ஆகிய படங்களும், தமிழில் விக்ரம் நடித்த 'தங்கலான்', அருள்நிதி நடித்த 'டிமான்ட்டி காலனி 2', கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா' ஆகிய படங்களும், தெலுங்கில் ரவி தேஜா நடித்த 'மிஸ்டர் பச்சன்', ராம் பொத்தினேனி நடித்த 'டபுள் ஐ ஸ்மார்ட்', மலையாளத்தில் பாசில் ஜோசப் நடித்த 'நுணகுழி', சிஜு சன்னி, அமித் மோகன் நடித்த 'வாழ - பயோபிக் ஆப் எ பில்லியன் பாய்ஸ்', ரதீஷ் சுந்தர் நடித்த 'மாவோயிஸ்ட்' ஆகிய படங்களும் வெளிவந்தன.
அதிக வசூலைக் குவிக்கப் போட்டி போடும் படங்கள் என்றால் ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களைச் சொல்லலாம். அவற்றில் நேற்றைய முதல் நாள் வசூலில் மற்ற படங்களைக் காட்டிலும் ஹிந்திப் படமான 'ஸ்திரீ 2' படம் இந்தியாவில் மட்டும் 76 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளது.
இதுவரை வெளிவந்த ஹிந்தி உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்களில் இது முதல்நாள் வசூலில் வரலாற்று சாதனை என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.