22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
புதிய படங்களின் வெளியீடுகளில் தேசிய அளவில் முக்கியமான ஒரு தினம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15. இந்த வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்கள் வந்தன.
ஹிந்தியில், அக்ஷய்குமார் நடித்த 'கேல் கேல் மெய்ன்', ஜான்ஆபிரகாம் நடித்த 'வேதா', ராஜ்குமார் ராவ் நடித்த 'ஸ்த்ரீ 2' ஆகிய படங்களும், தமிழில் விக்ரம் நடித்த 'தங்கலான்', அருள்நிதி நடித்த 'டிமான்ட்டி காலனி 2', கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா' ஆகிய படங்களும், தெலுங்கில் ரவி தேஜா நடித்த 'மிஸ்டர் பச்சன்', ராம் பொத்தினேனி நடித்த 'டபுள் ஐ ஸ்மார்ட்', மலையாளத்தில் பாசில் ஜோசப் நடித்த 'நுணகுழி', சிஜு சன்னி, அமித் மோகன் நடித்த 'வாழ - பயோபிக் ஆப் எ பில்லியன் பாய்ஸ்', ரதீஷ் சுந்தர் நடித்த 'மாவோயிஸ்ட்' ஆகிய படங்களும் வெளிவந்தன.
அதிக வசூலைக் குவிக்கப் போட்டி போடும் படங்கள் என்றால் ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களைச் சொல்லலாம். அவற்றில் நேற்றைய முதல் நாள் வசூலில் மற்ற படங்களைக் காட்டிலும் ஹிந்திப் படமான 'ஸ்திரீ 2' படம் இந்தியாவில் மட்டும் 76 கோடியே 50 லட்சம் வசூலித்துள்ளது.
இதுவரை வெளிவந்த ஹிந்தி உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்களில் இது முதல்நாள் வசூலில் வரலாற்று சாதனை என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.