‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆன்மிக மற்றும் சரித்திர கதைகளை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படங்களுக்கு, ஆந்திராவில் எப்போதுமே, சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான, "அன்னமயா, ஸ்ரீராமதாசு, பாண்டுரங்கடு, ஸ்ரீ சாய் போன்ற படங்களுக்கு கிடைத்த வெற்றியை, இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வரிசையில், தற்போது தயாராகி உள்ள படம் தான், இது. பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்த பூமியில் அவதரித்து, அத்வைத வேதாந்த தத்துவங்களை உலகிற்கு அறிமுகப்படுத்திய மகான், ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் படம் இது. கவுசிக் என்ற புதுமுகம், ஆதி சங்கரராக நடித்துள்ளார். நாகார்ஜுனா, மோகன் பாபு, கமாலினி முகர்ஜி போன்றோரும், இதில் நடித்துள்ளனர். அரசியலுக்கு போய் விட்டதால், சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்த, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இந்த படத்தில், ஆதி சங்கரர் கேரக்டருக்காக, டப்பிங் பேசியுள்ளாராம்.