போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அண்டை மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை, மண் மணம் மாறாமல், அதே நேட்டிவிட்டியுடன் படமாக்குவது, ஒரு விஷப் பரீட்சை என்றே கூறலாம். அந்த விஷப் பரீட்சையை எழுதிப் பார்த்திருக்கிறார், பிரபல மலையாள இயக்குனர், பத்ம குமார். ஒரிசா மாநிலத்தில் நடக்கும் சம்பவங்கள் தான், இந்த படத்தின் மையக் கரு. கடத்தல்காரர்கள், மாபியாக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் இளம் பெண்ணை பற்றிய நிகழ்வுகளை, உணர்ச்சி மயமாக படமாக்கி உள்ளனர்.
ஒரிசாவுக்கு வரும், ஒரு கேரள போலீஸ்காரர், அந்த இளம் பெண்ணை, காப்பாற்றுவதும், அந்த பெண் மீது, காதல் வயப்படுவதும், அடி மனதை, மயிலிறகால் வருடுவது போன்ற, இயற்கையானதாக இருக்கும் என்கிறார், இயக்குனர். உன்னி முகுந்தன், நெடுமுடி வேணு, கனிகா, சனிகா நம்பியார், ஸ்வஸ்திகா போன்றோர், இந்த படத்தில் நடித்துள்ளனர்.