பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஹிந்தித் திரையுலகத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை வசூல் நாயகனாக இருந்தவர் அக்ஷய் குமார். ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. கடைசியாக வெளிவந்த 'சர்பிரா' படமும் படுதோல்வியை சந்தித்தது.
அக்ஷய் நடித்து ஆகஸ்ட் 15ல் “கேல் கேல் மெய்ன்' என்ற ஹிந்திப் படம் படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தனது தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார் அக்ஷய்.
“எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று சொல்ல விரும்புகிறேன். நான் எதைப் பற்றியும் அதிகம் நினைப்பதில்லை. எனது நான்கைந்து படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை. அதனால், 'சாரி, பிரண்ட், கவலைப்பட வேண்டாம்,' என பல மெசேஜ்கள் எனக்கு வருகின்றன. நான் சாகவில்லை, இப்படி வரும் மெசேஜ்களைப் பார்த்தால் எனக்கு இரங்கல் அனுப்புவது போல உள்ளது.
ஒரு பத்திரிகையாளர், “கவலைப்பட வேண்டாம், நீங்கள் திரும்பி வருவீர்கள்' என மெசேஜ் அனுப்பினார். அவரை நான் தொடர்பு கொண்டு, “திரும்பி' என்றால் என்ன, நான் எங்கே போய்விட்டேன், நான் இங்குதான் உள்ளேன், தொடர்ந்து வேலை செய்வேன் என்று சொன்னேன்.
நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நான் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து, வேலைக்குச் சென்று, வீட்டிற்கு வருகிறேன். நான் என்ன சம்பாதித்தாலும் சொந்தமாக சம்பாதிக்கிறேன். நான் யாரிடமிருந்தும் எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னைத் தடுக்க என்னை சுட்டு வீழ்த்தும் வரும் நான் தொடர்ந்து வேலை செய்வேன்,” என காட்டமாகப் பேசியுள்ளார்.