துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' |
பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கருத்துகளை ஆதரித்தும், எதிர்கட்சி கருத்துகளை விமர்சித்தும் வந்த கங்கனா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தான் பிறந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தல் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது எம்.பி ஆகியுள்ள அவர் விரைவில் அமைச்சராகும் சாத்தியகூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எம்.பி., என்கிற வகையில் தன்னை சந்திக்க வருகிறவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். எனவே என்னை சந்திக்க வரும் தொகுதி மக்கள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். தொகுதி மக்கள் என்னை மண்டியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். மாநில மக்கள் மணாலியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். வருகையின் நோக்கம் மற்றும் விஷயமும் முன்னரே எழுதி அனுப்ப வேண்டும். கூட்டத்தையும், நேரம் வீணாவதை தடுக்கவுமே இந்த ஏற்பாடு என்று கூறியுள்ளார்.
அடையாள அட்டை இல்லாத அனைத்து தரப்பு மக்களையும் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும். அது அவர்களது பொறுப்பு. அதைவிடுத்து அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று கூறுவது சரியல்ல என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.