விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் |

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன ‛அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே படத்தை ஹிந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் ‛கபீர் சிங்' என்கிற பெயரில் ரீமேக் செய்தார். அங்கேயும் இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் என்கிற படத்தையும் இயக்கி கிட்டத்தட்ட 1000 கோடி வசூல் என்கிற சாதனை படத்திற்கு சொந்தக்காரராகவும் மாறினார். இந்த நிலையில் இவர் இயக்கிய கபீர் சிங் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் அடில் ஹுசைன் என்பவர் அந்த படத்தில் நடித்ததற்காக தான் ரொம்பவே வருத்தப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “என் வாழ்க்கையில் கபீர் சிங் என்கிற படத்தில் நடித்ததற்காக மட்டும் நான் ரொம்பவே வருத்தப்படுகிறேன். அந்த படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது என்று அதன் பிறகு நினைத்தேன். அந்த படத்தின் கதையையும் நான் கேட்கவில்லை. அதன் ஒரிஜினல் படத்தையும் நான் பார்க்கவில்லை. என்னிடம் சொல்லப்பட்ட காட்சி நன்றாக இருந்தது. அதனால் படமும் நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில் ஒப்புக்கொண்டு நடித்தேன். ஆனால் இன்று அதற்காக வருத்தப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். கபீர் சிங் வெளியாகி சில வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் திடீரென இப்படி அடில் ஹுசைன் ஒரு கருத்தை கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.