காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி |

கடந்த 2014 ஆம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று வெரிய பில்டெக் லிமிடெட் என்ற  நிறுவனம் விளம்பரம் செய்தது. அதன் மூலமாக 6,600 கோடி ரூபாய் பொதுமக்களிடம் வசூலித்தார்கள். ஆனால் தாங்கள் சொன்னது போன்று பொதுமக்களுக்கு மாதம் தோறும்  பத்து சதவீதம் வட்டி வழங்காமல் மக்களின்  முதலீடையும்  அந்த நிறுவனம் மோசடி செய்தது. இந்த பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா செட்டியும்  அவரது கணவரான ராஜ் குந்த்ராவும் இருப்பது தெரியவந்தது. 
இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை  விசாரணை நடத்தி வந்தது. இந்த வெரிய பில்டெக் நிறுவனத்தை நடத்தி வந்த ஏஜெண்டுகள் மீதும்  மும்பை போலீசில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையில் உக்ரைனில் பிட்காயின் மினி பார்ம் அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜ் என்ற ஏஜென்டிடம் இருந்து வாங்கியதாக தெரியவந்தது. அதன் மதிப்பு 150 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. 
இந்நிலையில் தற்போது இந்த பிட்காயின் மோசடி வழக்கை அமலாக்கத்துறை  தீவிரப்படுத்தி உள்ளது. அதனால் இந்த மோசடியின் பின்னணியில் இருக்கும் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவியான நடிகை ஷில்பா செட்டிக்கு சொந்தமான  97 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை  பறிமுதல் முடக்கி உள்ளது. அதோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமித் பரத்வாஜ் உள்ளிட்ட சிலர்  கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.
 
           
             
           
             
           
             
           
            