பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். 80 வயதை கடந்த நிலையிலும் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து டிவி நிகழ்ச்சி, விளம்பரம் என பிஸியாக உள்ளார். இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இவர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
காலில் ஏற்பட்ட ரத்த குழாய் அடைப்பு காரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின் அமிதாப் பச்சன் இன்றே வீடு திரும்பி உள்ளார். தொடர்ந்து சில நாட்கள் ஓய்வில் இருக்க உள்ளார். அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். காலுக்கு தான் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்பட்டது அவருக்கு இதயத்தில் எந்த பிரச்னை இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது.