நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
தமிழ் இயக்குனர்கள் அவ்வப்போது ஹிந்தியிலும் சென்று 'சூப்பர் ஹிட்' கொடுத்துவிட்டு வந்துவிடுவது வழக்கம். தமிழ் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த 'கஜினி' ஹிந்திப் படம் அங்கு 100 கோடி வசூலை ஆரம்பித்து வைத்தது. அதன்பின் ஹிந்தியில் முருகதாஸ் இயக்கிய 'ஹாலிடே, அகிரா' ஆகியவை பெரிய வெற்றி பெறவில்லை. ஒரு இடைவெளிக்குப் பிறகு சல்மான்கான் நடிக்க உள்ள படத்தை முருகதாஸ் இயக்குவது குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
ஆனால், இதிலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ் இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் நடித்து வந்த 'த புல்' ஹிந்திப் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் நடிக்க இருப்பது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம்தான் 'த புல்'. இப்படம்தான் அடுத்த வருட ஈத் நாளன்று வெளியாகும் என்று சொன்னார்கள். இப்போது அதற்குப் பதிலாக முருகதாஸ், சல்மான் இணைய உள்ள படம்தான் அந்தத் தேதியில் வெளிவர உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
ஒரு தமிழ் இயக்குனரைக் காத்திருக்க வைத்துவிட்டு, மற்றொரு தமிழ் இயக்குனருக்கு சல்மான் வரவேற்பு தந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணுவர்தன் தமிழில் அஜித் நடித்த 'பில்லா, ஆரம்பம்' ஆர்யா நடித்த 'பட்டியல், சர்வம், யட்சன்' படங்களை இயக்கியவர். ஹிந்தியில் அவர் இயக்கி ஓடிடியில் வெளிவந்த 'ஷெர்ஷா' பெரும் வரவேற்பைப் பெற்றது. 2021ல் வெளிவந்த அப்படத்திற்குப் பிறகு 'த புல்' படத்தை இயக்கி வந்தார்.