நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கேஜிஎப்-2 படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததை தொடர்ந்து தென்னிந்திய படங்களின் மீது குறிப்பாக கன்னட படங்களின் பக்கம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கவனம் அதிகமாக திரும்பி உள்ளது. கால்ஷீட் கேட்டால் மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டு வருகிறார் சஞ்சய் தத். அந்த வகையில் பிரபல கன்னட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‛கே.டி' என்கிற பீரியட் படத்தில் தொடர்ச்சியாக 42 நாட்கள் கால்ஷீட் கொடுத்து மைசூரில் முகாமிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார் சஞ்சய் தத்.
இவர் நடித்த காட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இத்தனை நாட்களில் சஞ்சய் தத்துக்கு ஒரு சிறிய சங்கடம் கூட ஏற்படாத வகையில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இந்த படத்தில் துருவ் சார்ஜா கதாநாயகனாக நடிக்க, ஷில்பா ஷெட்டி, நோரா பதேகி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.