சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கேஜிஎப்-2 படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததை தொடர்ந்து தென்னிந்திய படங்களின் மீது குறிப்பாக கன்னட படங்களின் பக்கம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கவனம் அதிகமாக திரும்பி உள்ளது. கால்ஷீட் கேட்டால் மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டு வருகிறார் சஞ்சய் தத். அந்த வகையில் பிரபல கன்னட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‛கே.டி' என்கிற பீரியட் படத்தில் தொடர்ச்சியாக 42 நாட்கள் கால்ஷீட் கொடுத்து மைசூரில் முகாமிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார் சஞ்சய் தத்.
இவர் நடித்த காட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இத்தனை நாட்களில் சஞ்சய் தத்துக்கு ஒரு சிறிய சங்கடம் கூட ஏற்படாத வகையில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இந்த படத்தில் துருவ் சார்ஜா கதாநாயகனாக நடிக்க, ஷில்பா ஷெட்டி, நோரா பதேகி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.