ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மன அமைதிக்காக ஒரு வருடம் ஓய்வு எடுக்க போவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இப்போதும் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது பிரகாஷ் ஜா இயக்கி வரும் சத்யகிரஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது பிளாக்கில், ஓராண்டு ஓய்வு எடுக்க போவதாக தெரிவித்துள்ளார். தனது பிளாக்கில் மேலும் அவர் கூறியிருப்பதாவது, மெல்போர்ன் நகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எனது கடந்த கால சினிமா நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கவுரவம் அளிக்கப்பட இருக்கிறது. அதில் நான் பங்கேற்க உள்ளேன். தொடர்ந்து சத்யகிரஹா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிலும், அதனைத்தொடர்ந்து நியூயார்க்கில் தி கிரேட் கேட்ஸ்பை படத்தின் ப்ரீமியர் ஷோவிலும் பங்கேற்கிறேன். பிறகு ஓராண்டுக்கு ஓய்வு எடுக்க போகிறேன். என்னுள் இருக்கும் மன உளைச்சலை போக்கவும், மன அமைதிக்காவும் இந்த ஓய்வு அவசியமாகிறது என்று கூறியுள்ளார்.