ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் |
பாலிவுட் நடிகை கங்கனா தனது அதிரடியான துணிச்சலான கருத்துக்களுக்காக பிரபலமானவர். மணிகர்ணிகா என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த கங்கனா, மறைந்த பாரத பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தற்போது உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தில் நடித்துள்ளதுடன், அவரே இயக்கியும் உள்ளார்.
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு முறையில் மறைந்த பிரபல தலைவர்களை கூட உயிருடன் இருப்பது போன்றும் அவர்கள் பேசுவது போன்றும் தத்ரூபமாக உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் உருவத்தை செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கி அவருக்கு எதிரில் கங்கனா அமர்ந்து கொண்டு அவருடன் உரையாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கங்கனா. அதுமட்டுமல்ல செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி உடனும் அவர் உரையாடியது குறித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.