தங்கலான் படப்பிடிப்பிற்கு பிறகு 5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன் : மாளவிகா மோகனன் | 'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் |
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்து ராசியான ஜோடி என்கிற வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றனர். இதை தொடர்ந்து தற்போது வரை அவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாகவும் அதை அவர்கள் ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்திருக்கிறது என்கிற தகவலை ஹிந்தி நடிகரும் தற்போது அனிமல் படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவருமான ரன்பீர் கபூர் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு சேனல் ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி தரும் அன்ஸ்டாப்பபிள் என்கிற ரியாலிட்டி ஷோவில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மற்று இயக்குனர் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரன்பீர் கபூர், ‛‛சந்திப் ரெட்டி வங்கா முதன்முதலாக ராஷ்மிகாவை சந்தித்தது அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்காக விஜய் தேவரகொண்டா தனது வீட்டில் கொடுத்த பார்ட்டியின்போது தான் என்று கூறியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படம் வெளியானது 2017 ஆகஸ்ட் மாதம். கீதா கோவிந்தம் படம் வெளியானது 2018 ஆகஸ்ட் மாதம். அதாவது கீதா கோவிந்தம் பட அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் நட்பாக இருந்திருக்கிறார்கள் என்கிற தகவல் இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.