திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
கடந்த 2014 ல் ஹிந்தியில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற படம் 'மர்தாணி'. பெண்களை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த இந்த படத்தில் கதாநாயகியாக ராணி முகர்ஜி நடித்திருந்தார். பிரதீப் சர்கார் இயக்க, இதன் கதையை கோபி புத்ரன் என்பவர் எழுதியிருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் மர்தாணி-2 என்கிற பெயரில் 2019ம் வருடம் வெளியானது. இதிலும் ராணி முகர்ஜியே கதாநாயகியாக நடித்தார். முதல் பாகத்திற்கு கதை எழுதிய கோபி புத்ரனே இந்த இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியதுடன் அவரே இந்த படத்தை இயக்கவும் செய்தார். இந்த படமும் முதல் பாகத்தை போல வெற்றி பெற்றது.
தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கதையை இயக்குனர் கோபி புத்ரனே தற்போது எழுதி வருகிறார். இதிலும் ராணி முகர்ஜி கதாநாயகியாக நடிக்க, பிரபல தயாரிப்பாளரும் மற்றும் ராணி முகர்ஜியின் கணவருமான ஆதித்யா சோப்ராதயாரிக்க இருக்கிறார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.