அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு 'டீப்பேக்' எனப்படும் போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ராஷ்மிகா, கத்ரீனா கைப், கஜோல், சாரா டெண்டுல்கர், டி.வி நடிகைகள் ஜன்னத் ஜூபர், அனுஷ்கா சென் ஆகியோரை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்கள் வெளியானது. இந்த வீடியோக்கள் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிக நேர்த்தியாக இருப்பதால் நடிகைகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நடிகை ஆலியா பட்டை ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அரைகுறை ஆடை அணிந்த ஒரு பெண் ஆபாசமான உடல் அசைவுகளை வெளிப்படுத்துகிறார். அவரது முகத்திற்கு பதிலாக ஆலியா பட்டின் முகம் பொருத்தப்பட்டு வீடியோ வெளியாகி உள்ளது. இது பாலிவுட்டில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.