10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு புகைப்படத்தில் அல்லது வீடியோவில் இருக்கும் ஒருவரது முகத்தை இன்னொரு நபரின் முகத்தின் மேல் பொருத்த முடியும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான் சோசியல் மீடியாவில் பலரும் போலியான வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். இப்படித்தான் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஷாரா படேல் என்பவரின் முகத்தில் இணைத்து டீப் பேக் வீடியோ வெளியிட்டிருந்தார்கள்.
இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தற்போது மத்திய அரசும் அதை தடுப்பதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இப்படியான நிலையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைப்பின் டீப் பேக் வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து பலரும் இதுகுறித்து புகார் அளிக்குமாறு கேத்ரினா கைப்பை வலியுறுத்தி வருகிறார்கள்.