Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம்

28 செப், 2025 - 03:53 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-film-Jupiter-Pictures-wanted-to-make-but-couldnt
Advertisement


தமிழில் பேசும் படம் அறிமுகமான முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் கலையுலகிலும், சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்ட, காணப்பட்ட பெயர் என்றால் அது 'ஜுபிடர் பிக்சர்ஸ்' என்றால் அது மிகையன்று. எம் சோமசுந்தரமும், எஸ் கே மொய்தீனும் இணைந்து தயாரித்து, 1935ல் “மேனகா” என்ற ஒரு சமூகத் திரைப்படத்தைத் தந்தனர். பின்னர் 'ஜுபிடர் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, “கண்ணகி”, “ஸ்ரீமுருகன்”, “அபிமன்யூ”, “வேலைக்காரி”, “கன்னியின் காதலி”, “மர்மயோகி”, “மனோகரா” என பல அற்புதமான திரைப்படங்களைத் தயாரித்தும் வெளியிட்டனர்.

மு கருணாநிதி, எஸ் டி சுந்தரம் போன்றோர் கதை வசனகர்த்தாக்களாக உருவானதும், கவிஞர் கண்ணதாசன் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானதும், எம் ஜி ஆர், எம் என் நம்பியார், எஸ் ஏ நடராஜன், நரசிம்ம பாரதி போன்ற நாடக நடிகர்கள் சினிமா பிரவேசத்தை துவக்கியதும், ஏ எஸ் ஏ சாமி, ஏ காசிலிங்கம் போன்றோர் இயக்குநர்களாக உயர்வு பெற்றதும் 'ஜுபிடர் பிக்சர்ஸ்' என்ற இந்த ஆரம்பப் புள்ளியிலிருந்துதான். இப்படி பலருடைய கலையுலகப் பிரவேசத்திற்கு வித்திட்ட இந்த 'ஜுபிடர் பிக்சர்ஸ்', 1951ம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் 'கைதி'.

இந்தப் படத்தின் இயக்குநரான வீணை எஸ் பாலசந்தர், படப்பிடிப்பின் போது, 'ஜுபிடர் பிக்சர்ஸ்' தயாரிப்பாளர் சோமுவிடம், எனக்கு ஏழு வயதிருக்கும் போது, ஓர் ஆங்கிலத் திரைப்படம் சென்னைக்கு வந்திருந்தது. அந்தப் படத்தை நான் பார்த்ததிலிருந்து என் மனதின் அடித்தளத்தில் அப்படியே அந்த திரைப்படத்தின் மையக் கரு பதிந்து விட்டது. நாளாக நாளாக என் வயதுடன் அந்த மையக் கருத்தும் வளர்ந்து விட, ஒரு நாள் அதுவே முழுக் கதையாக உருப் பெற்றும் விட்டது என சொல்ல, கதையைச் சொல்லுங்கள் என தயாரிப்பாளர் சோமு கேட்க, கதையைச் சொன்னார் வீணை எஸ் பாலசந்தர்.

நான் எத்தனையோ மர்மக் கதைகளைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் இவ்வளவு அற்புதமாக எந்தக் கதையும் இருந்ததில்லை. இதை நான் படமாக எடுக்க ஆசைப்படுகின்றேன். ஆனால் இப்போது 'ஜுபிடர் பிக்சர்ஸ்' பொருளாதார நிலை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொன்ன இந்தக் கதையை படமாக எடுப்பதற்கு அதிகமான பணம் செலவிட வேண்டும். அந்த அளவிற்கு செலவிட இப்போது என்னிடம் பணம் இல்லையே என சொல்லி வருந்தியிருக்கின்றார் 'ஜுபிடர் பிக்சர்ஸ்' தயாரிப்பாளர் சோமு.

அந்தத் திரைப்படம்தான் பின்னாளில் வீணை எஸ் பாலசந்தரே தயாரித்து இயக்கியிருந்த “நடு இரவில்” என்ற திரைப்படம். பிரிட்டிஷ் எழுத்தாளர் அகதா கிறிஸ்டி எழுதிய “அண்ட் தென் தேர் வேர் நன்” என்ற ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை, 1964-65 காலகட்டங்களில் தயாரித்து, இயக்கி, பின் விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன் வராததால், வீணை எஸ் பாலசந்தரே விநியோக உரிமையையும் கையில் எடுத்து, நம்பிக்கையோடு படத்தை 1970ல் வெளியிட்டார். படம் தரமான வெற்றியையும் பெற்றுத் தந்தது வீணை எஸ் பாலசந்தருக்கு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் ... என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு என் சாம்பியனுக்கு அருகில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in