‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சுப்ரீம் கோர்ட்டின் ஆணைக்கு இணங்க கண்டிப்பாக நான் சரண் அடைவேன் என்று நடிகர் சஞ்சய் தத் கண்ணீர் மல்க தெரிவித்தார். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அளவுக்கு அதிகமான ஆயுதம் வைத்தாக நடிகர் சஞ்சய் தத் மீது வழக்கு போடப்பட்டது. வழக்கை விசாரித்த தடா கோர்ட் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டை விதித்தது. இதனையடுத்து சிறை சென்ற சஞ்சய் தத் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2007ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார். இதனையடுத்து கடந்தவாரம் இவ்வழக்கு தொடர்பான இறுதிவிசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.
அதில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் மீதமுள்ள 3.5 ஆண்டுகள் சஞ்சய் தத் கண்டிப்பாக சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஜாமினில் வெளியே வந்த சஞ்சய் தத் ஒரு மாத காலத்திற்குள் சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது. இதனையடுத்து சஞ்சய் தத் எப்போது சரண் அடைவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி நான் சரண் அடைவேன் என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.
மும்பையில் உள்ள தனது வீட்டில் இன்று(28.03.13) செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் தத், சுப்ரீம் கோர்ட் ஆணையை நான் மதிக்கிறேன். எனக்கென்று சில கடமைகள் இருக்கிறது. சில படங்களின் வேலைகள் உள்ளன. அதனை எல்லாம் முடித்துவிட்டு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலகெடுவுக்குள் கண்டிப்பாக நான் சரண் அடைவேன். இதுநாள் வரை எனக்கு கொடுத்து வந்த ஆதரவுக்கு ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எனது நன்றி. நான் எனது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். ஐ லவ் மை கண்ட்ரி, ஐ லவ் மை கண்ட்ரி என்று கூறியபடி, கண் கலங்க ஆரம்பித்து விட்டார். பின்னர் அனைவருக்கும் நன்றி கூறியபடி கண்ணீர் மல்க தனது வீட்டிற்குள் சென்றார்.