‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
இஸ்ரேல் - பாலஸ்தீனிய போருக்கு உலகம் முழுக்க கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு சிலரும், இஸ்ரேலுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் போரில் அப்பாவி மக்கள் செத்து மடிவது குறித்து தனது கவலையை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : வன்முறையும், மரணமும் எதையும் கொண்டு வந்து தரப்போவதில்லை. அது நம்மிடையே உள்ள மனித நேயத்தைத்தான் அழிக்கும். மகாத்மா காந்தி வலிமையின் ஆயுதமாக அகிம்சையை போதித்தார். அகிம்சையும் உண்மையும் ஒன்றோடு ஒன்று கலந்தவை. நமது வார்த்தையிலும், எண்ணத்திலும், செயலிலும் எப்போதுமே அகிம்சையை கடைபிடிக்க முடியாதுதான். ஆனாலும் அகிம்சையை குறிக்கோளாக வைத்துக் கொண்டுதான் நாம் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும்.
இந்த போர் காரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீனத்தில் உள்ள எனது நண்பர்களும் இதில் சிக்கி தவிப்பது இன்னும் வேதனையை அளிக்கிறது. இந்த போர் பிரச்னை விரைவாக முடிவுக்கு வரவேண்டும். என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.