பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! | கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் | மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் |
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ மீது பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் 2008ம் ஆண்டு பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். தனுஸ்ரீ பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறியதை தொடர்ந்து மீடூ புகாருக்கு ஆளான நடிகர்கள் சார்பில் ராக்கி சாவந்த், தனுஸ்ரீ மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் தனுஸ்ரீ மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மும்பை ஓஷிவரா போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தனுஸ்ரீ கூறும்போது “கடந்த 2008ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நானும், ராக்கி சாவந்தும் நடித்தோம். அப்போது எனக்கும், ராக்கி சாவந்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவரை தயாரிப்பாளர் நீக்கினார். அதன்பின் கடந்த 2018ம் ஆண்டு சிலர் மீது நான் 'மீடூ' புகார் அளித்தேன். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராக்கி சாவந்த், எனக்கு எதிராக பல்வேறு பாலியல் அவதூறுகளை பரப்பினார். அத்தனைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது” என்றார்.