56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! |

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ மீது பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் 2008ம் ஆண்டு பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். தனுஸ்ரீ பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறியதை தொடர்ந்து மீடூ புகாருக்கு ஆளான நடிகர்கள் சார்பில் ராக்கி சாவந்த், தனுஸ்ரீ மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் தனுஸ்ரீ மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மும்பை ஓஷிவரா போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தனுஸ்ரீ கூறும்போது “கடந்த 2008ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நானும், ராக்கி சாவந்தும் நடித்தோம். அப்போது எனக்கும், ராக்கி சாவந்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவரை தயாரிப்பாளர் நீக்கினார். அதன்பின் கடந்த 2018ம் ஆண்டு சிலர் மீது நான் 'மீடூ' புகார் அளித்தேன். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராக்கி சாவந்த், எனக்கு எதிராக பல்வேறு பாலியல் அவதூறுகளை பரப்பினார். அத்தனைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது” என்றார்.




